உலக வரலாற்றில் பிரான்சில் நடந்த தொழில் புரட்சி, ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி, இந்தியாவில் நடந்த சுதந்திரப் போர் போன்றவற்றை போல் அய்ரோப்பிய வரலாற்றில் 15,16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஏற்பட்டதே மறுமலர்ச்சி (Renainance) ஆகும். ஆங்கில அறிஞர்கள் மறுமலர்ச்சியை மறுபிறவி என பொருள்பட கூறியுள்ளனர். கிரேக்கத்திலும், ரோமிலும் கதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், இசை, நாடகம், தத்துவம், மதக் கொள்கைகள் (Theology) ஆகிய துறைகளில் பண்டைய படைப்புகளுக்கு உயிரூட்டி 16ஆவது நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்தனர்.
மறுமலர்ச்சியின் அடிப்படைத் தத்துவம் மனிதநேயமும், கலாச்சாரமும் அழிவின்றி காக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர். கிருத்துவ மதக் கொள்கைகளின் நடைமுறைகள்படி ஒவ்வொரு துறையிலும் மறுமலர்ச்சிக்கு பணிகளை ஆற்றினர். கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து இத்தாலிக்கும், இத்தாலியிலிருந்து கான்ஸ்டாண்டி நோபிளுக்கும் சென்று அறிஞர் பெருமக்கள் இந்த மகத்தானப் பணியில் ஈடுபட்டனர்.
துவக்கத்தில் பிக்போ டேல்லா மிராண்டலோ என்பவர் 15ஆவது நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று அப்பகுதியிலுள் தத்துவங்களை அறிந்து ஏறத்தாழ புதிதாக 900 தத்துவங்களை இத்தாலியில் படைத்தார். இவர்தான் மறுமலர்ச்சியின் தத்துவத்தை வெளிக்கொணர்ந்தார். அதில் மனித இனத்திற்கு அரிய பண்புகள் உண்டு. அந்த பண்புகளுக்கு எவ்வித சேதாரமும் இன்றி காப்பாற்றப்பட வேண்டுமென்றும், அவ்வாறு தொய்வுகள் ஏற்பட்டாலும் அவை சரி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கலை, கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம், தத்துவம் போன்ற பல துறைகளில் இத்தாலிய – கிரேக்க கலைஞர்கள் மறுமலர்ச்சியைக் கண்டனர். இக்காலத்தில் தோன்றிய சிற்பக் கலைஞர்களும், ஓவியர்களும் அறிமுகமற்ற சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து தோன்றி அவர்களது பணிகளைப் பாராட்டக்கூடிய வகையில் செய்தனர். இப்பணியில் கல்வேறு குழுக்களாக இருந்து பொதுநோக்கோடு ஓவியர்களும், சிற்பக் கலைஞர்களும் கலையை வளர்த்தனர். இப்படிப்பட்ட கலைசூர்கள் மறுமலர்ச்சியின் காவலர்கள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டு புகழ் பெள்ளனர். லியார்னோ டார்வின்சி தீட்டிய இறுதி விருந்து (Last Supper) என்ற ஓவியம் தீட்டினார். ஓவியங்கள் தீட்டும்போது கணித (எஞுணிட்ஞுணtணூதூ) முறைப்படி தீட்டப்பட்டது.
புகழ்பெற்ற மோனோலிசா ஓவியமும் லியார்னோ டார்வின்சியால் படைக்கப்பட்டது. இப்படைப்புகள் யாவும் தத்ரூபமாக மக்களை புகைப்படம் போன்று எடுத்துக்காட்டியது. லியார்னோ டார்வின்சி ஒரு ஓவியர் மட்டுமல்லாமல், சிற்பத் துறையிலும், பொறியியல் துறையிலும், விஞ்ஞானத்திலும், தத்துவத்திலும், இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் ஆகாய விமானத்தை வடிவமைத்தார்.
மைக்கல் ஏஞ்சலோவின் புனித மேரியின் மடியில் கிறிஸ்து தவழும் படைப்பும் இக்காலத்திலும் சிறப்புப் பெற்றது. மைக்கேல் ஏஞ்சலோவின் படைப்புகள் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் இன்றும் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய படைப்புகளில் ‘இறுதித் தீர்ப்பு’ (The Last Judgement), ‘மனிதனின் வீழ்ச்சி’ (The fall of Man) ஆகியவை புகழ்பெற்றவையாகும்.
ரேபில் என்ற கலைஞரும் பல்வேறு படைப்புகளை செய்தார். ‘ரேபில்’ன் படைப்புகளில் முக்கியமானது ‘புனித மேரி’ ஓவியமாகும். இக்காலத்தில் உடலியல் அமைப்புகளின் குறிப்பாக உடலின் நரம்புகள்கூட வெளிப்பட பல சிற்பங்களை ஓவியங்களாக தீட்டப்பட்டன. மறுமலர்ச்சி காலத்தில் தீட்டப்பட்ட இப்படைப்புகள் 12,13ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த ஓவிய அமைப்பு முறையில் மாற்றிய வகையில் இருந்த புதிய கட்டட அமைப்புக் கூளுகள் நடைமுறைக்கு வந்தன. முதன் முதலாக புதிய கட்டட அமைப்பு முறையை புனித பீட்டர் ஆலயத்தில் இக்காலத்தில் அமைக்கப்பட்டது. வளர்ந்த கோபுர உச்சிகளுடன் தேவாலயங்கள் கட்டப்பட்டன.
அய்ரோப்பாவில் இலக்கியத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகள் சிறப்புற்றன. இலத்தீன் மொழிதான் அன்றைய தினம் கல்விக்கும், இலக்கியத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய மொழிகளும், இலக்கியங்களும் வளர்ச்சி அடைந்தன. நவீன அய்ரோப்பிய இலக்கியங்கள் தோன்றின. கவிதை, நாடகம், கதை போன்றவை தோன்றின. ஏõண்டேயின் ‘டிவெய்ன் காமெடி’ படைக்கப் பெற்றது. டாண்டே இலத்தீன் மொழியில் அதிகமான நூல்களை எழுதியவர். புகழ்பெற்ற காண்டிபரி கதைகள் எழுதப்பட்டன.
தாமஸ் மூர் ‘உடோப்பியாவும்’, மாக்கிய வெல்லியின் அரசியல் படைப்புகளும் புகழ்பெற்றன. இக்காலத்தில் புகழ்பெற்ற பிரின்ஸ் நூலால் நாடு (State) என்றால் என்ன என்பது காட்டப்பட்டது. நகைச்சுவையான ‘டான் குவிக்சாட்’ என்ற பைத்தியக்கார அரசரின் கதையும் புகழ்பெற்றது. பிரான்சிஸ்பேகன் என்ற ஆங்கில அறிஞர் பல்வேறு தலைப்புகளில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் சிறப்பாக அரங்கேறின. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எதுவும் துவக்கத்தில் எழுதப்படவில்லை என்பதும், நாடகங்களாக நடிக்கப்பட்டபோதுதான் எழுதப்பட்டன என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. விளையாட்டுத் துறையில் செஸ் விளையாட்டு மக்கள் மத்தியில் அறிமுகமாயிற்று.
அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. இதனால் நூல்களை எளியவர்களும் வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. அச்சிட்ட பைபிள் எளிதாக மக்களுக்குக் கிடைத்தது.
அறிவியல் மறுமலர்ச்சி தொடங்கியது. வானியல் ஆராய்ச்சிகள் துவங்கின. போலந்து நாட்டைச் சேர்ந்த கோபர் நிகஸ், உலகம், சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை வெளியிட்டார். இவர் இத்தாலியில் வாழ்ந்தவர். கலிலியோ, தொலைநோக்கியை கண்டுபிடித்தார். கோபர் நிகஸின் உண்மையை கலிலியோ உறுதிபடுத்தினார். கெப்ளர் என்ற விஞ்ஞானி கணிதத்தையும், வானிலையையும் இணைத்து பல அறிவியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தினார். இதனால் பிற்காலத்தில் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு கொள்கையை கண்டுபிடித்தார். இதன் விளைவாக நியூட்டனுடைய விஞ்ஞான கொள்கையும் அமைந்தது. புதிய தற்கால விஞ்ஞான வளர்ச்சி மறுமலர்ச்சி காலத்தின் துவக்கமே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மருத்துவம், சுகாதாரம் போன்ற புதிய கண்டுபிடிப்புகளும் நடைபெற்றன. மனித உடற்கூறுகளில் இருப்பது என்ன என்பதுபற்றி அறியப்பட்டது. இரத்த ஓட்டம், இறப்பு பற்றிய ஹார்வி விஞ்ஞானப்பூர்வமான முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய நாடுகளை கப்பல் பயணம் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் இக்காலத்தில்தான் தோன்றின. எண் கணிதத்தின் அளவுகள் விவாதிக்கப்பட்டன. திசை காட்டும் கருவியை பற்றி அறிந்தனர்.
இப்படி ஒவ்வொரு துறையிலும் அக்காலத்தில் உள்ள குறைந்த அளவு வசதிகளுக்கேற்ப மாபெரும் பணிகளை பல அறிஞர்கள் செய்தனர். இதனால் அன்றைக்கு அய்ரோப்பாவில் நாகரிகங்களும் புதுப்பிக்கப்பட்டது. மனித நேயம் காத்து ஒரு புது யுகத்தை அன்றைக்குக் கண்டனர். இன்றுள்ள பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடிப்படை அன்யை மறுமலர்ச்சியின் தத்துவங்களே. இதனுடைய தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்தன. இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவும், அடர்த்தியான காடுகள் நிறைந்த தென் அமெரிக்காவும் அறிவியல் பூர்வமான வாழ்க்கைக்கு வந்தன. மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம், நாகரிகம் மேம்பட்டது. சுமேரியா, நைல், திராவிட மற்றும் அய்ரோப்பிய நாகரிகங்கள் தோன்றி மறைந்த பின்பு மறுமலர்ச்சி காலத்தில் அறிவுபூர்வமான வாழ்க்கைத் துவங்கியது.
காட்டுமிராண்டித்தனமாகவும், கொடுங்கோல் அரசர்களுக்குக் கீழிருந்த மக்களிடம் தங்கள் உரிமைகள் என்ன? எப்படி நாகரிகம் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு சிந்தனை தோன்றி மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அரசியல் தத்துவங்கள் விஞ்ஞானப்பூர்வமாக அணுகப்பட்டன.
மக்கள் சாசனம் இங்கிலாந்தில் மக்களுக்கு வழங்கிய உரிமைகள் சரியாக சென்றடையவில்லை. ஆனால், மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் தத்துவங்கள் மக்களிடையே சென்று மக்களை விழிப்படையச் செய்தன. ஒரு தத்துவம் அல்லது கோட்பாட்டிற்கு சேதாரமோ அல்லது தொய்வோ ஏற்பட்டால் அதை சீரமைக்கும் பணியில் சில ஆர்வலர்கள் தோன்றி அப்பணியை மேற்கொள்வார்கள்.
அதேபோன்று தமிழகத்தில் அண்ணா ஏற்றி வைத்த கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் இன்று சோதனை ஏற்பட்டுள்ளது. அதை கட்டிக் காக்கும் பணியில் மறுமலர்ச்சி தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகத்தின் நலனும், மாநில உரிமைகளும் பெறக்கூடிய வகையில் வைகோ தலைமையில் போராடுவோம் வாரீர்! வாரீர்!!
மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்
உலக வரலாற்றில், ஜரோப்பிய மறுமலர்ச்சி என்ற சம்பவம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா கலாச்சாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே ஜரோப்பிய மறுமலர்ச்சி (Europe renaissance) எனப்படுகிறது. மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' அல்லது 'புத்துயிர்ப்பு' என்று பொருள்.
கடந்த 1453ம் ஆண்டு, கிழக்கு ரோமப் பேரரசின் வர்த்தக மையமாக செயல்பட்ட கான்ஸ்டாட்டிநோப்பிள் துறைமுகத்தை ( Constantinople) ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றினர். இதுவே, ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். இந்த படையெடுப்பால், கிழக்கு ரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள், மேற்கு ரோம பேரரசிற்கு இடம் பெயர்ந்தனர். அப்படி செல்லும்போது, கான்ஸ்டாட்டிநோப்பிளில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பண்டைய நூல்களையும் கூடவே எடுத்து சென்றனர். அறிஞர்கள், அறிவுப் பொக்கிஷமாக இருந்த பலதுறை நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்தனர். பண்டைய இலக்கியங்களை கற்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இதனால், மேற்கு ரோம பேரரசில் புதிய கருத்துக்களின் தாக்கம் ஏற்பட்டது. இதன்விளைவாக, 14ம், 15ம் நூற்றாண்டுகளில் கிரேக்க, ரோம கலாச்சாரம் மீண்டும் புத்துயிர்ப்பு அடைந்தது.
தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை மக்கள் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தனர். எந்த ஒரு விஷயத்தையும் ஆய்வு செய்யும் போது ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை அடிப்படையாக வைத்து, தர்க்க ரீதியாக ஆய்வுகளை நிகழ்த்தினார்கள். அதுவரை இருண்ட காலத்தில் இருந்த ஜரோப்பிய அரசியல், பொருளாதார, விஞ்ஞான துறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜரோப்பாவில் புதிய நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே 'மறுமலர்ச்சி' என அழைக்கப்படுகிறது.
அறிவியல் கண்ட முன்னேற்றம்
கிறிஸ்தவ மதபீடம் என்ற ஒரு குறுகிய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், பின்னர் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜரோப்பிய மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. கத்தோலிக்க திருச்சபையின் ஊழல் நடவடிக்கைக்கு எதிராக அன்றைய அறிவுஜீவிகள், பல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்தார்கள். அதற்கு மக்களும் ஆதரவு அளித்தார்கள்.
‘உலகம் தட்டையானது’ என்பன போன்ற மதத்தின் பெயரால் நிலவி வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, விஞ்ஞானிகள் ஆய்வின் அடிப்படையில் புதிய கருத்துகளை வெளியிட்டனர். வானியலின் தந்தை எனப் போற்றப்படுகிற போலந்து நாட்டைச் சேர்ந்த 'நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்' (Nicolaus Copernicus) நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர். அதுவரை பூமியைத்தான் எல்லா கோள்களும் சுற்றி வருகிறது என்று நம்பப்பட்டு வந்த கருத்துக்கு எதிராக, பூமி சூரியனை வலம் வருகிறது என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். அதுதவிர, மற்ற கோள்களும் சூரியனை சுற்றி வலம் வருகின்றன என்பதை நிரூபித்து காட்டினார். அவரை அடுத்து, ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Keple) என்ற விஞ்ஞானி அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன என்றார்.
இத்தாலியைச் சேர்ந்த 'கலிலியோ' (Galileo Galilei) என்ற விஞ்ஞானி ஆற்றிய சாதனைகளும் ஏராளம். கணித பேராசிரியரான இவர், உயர்தரமான தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன்மூலம், சந்திரனை கண்காணித்து, அங்கே பூமியைப் போல மலைகள், சிகரங்கள் காணப்படுகின்றன என்றார். கோப்பர்நிக்கசின் கருத்துகளை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவலாய தலைமை, கலிலியோவை நாடு கடத்தியது. ஜசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி, 'நியூட்டனின் விதி' என்ற கோட்பாட்டின் வழியாக, விஞ்ஞான வளச்ச்சிக்கு வழியமைத்தார். எந்த ஒரு வினைக்கும், சமனான எதிர்வினை உண்டு என்பதை செய்முறை வழியாக நிரூபித்துக் காட்டினார்.
ஜெர்மனியரான 'ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்' என்ற விஞ்ஞானி அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பு துணைபுரிந்தது. மறுமலர்ச்சி கருத்துகளை மக்கள் மத்தியில் நூல் வடிவில் பரப்ப, அச்சியந்திரம் உதவியதால் மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் எளிதாக ஊடுருவின.
உயரம் சென்ற மருத்துவம்
மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புது யுகத்தில், மருத்துவத் துறை சிறப்பான வளர்ச்சியினை அடைந்தது. 'மைக்கல் சர்வேஸஸ்' ( Michael Servetus)என்பவர் மனிதனுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுவதில், நுரையீரலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் ஹார்வே' (William Harvey) என்ற விஞ்ஞானி இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்தினை முதன்முதலில் முன்வைத்தார்.
அரசியல் மாற்றம்
சமய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க மதகுருமார்களின் அளவுக்அகு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் மன்னனது கைகளிற்கு திரும்பியது. அதேபோல், ஜரோப்பாவில் நிலப்பிரபுக்களுக்கு இருந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமைகள், சலுகைகள் போன்றவை இல்லாமல் ஒழிக்கப்பட்டன. மத்தியதர வகுப்பினர் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இதனால், ஜரோப்பிய அரசியலில் உறுதித்தன்மையும், தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டது. ஜரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.
பொருளாதார புரட்சி
மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பொருளாதாரத்திலும் புதுயுகத்தை தோற்றுவித்தது. மன்னர்கள், பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார்கள். மறுமலர்ச்சி காலத்தில், ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. மனிதசக்திக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள்இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க, ஐரோப்பியர்கள் புதிய நாடுகளைத் தேடி பயணப்பட்டனர். திசைகாட்டும்கருவி, தொலைநோக்கி, படகு, ஆயுதங்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு நாடுகளைக் கடக்க உதவியாய் இருந்தது.
ஜரோப்பியர்கள் கப்பல் கட்டும் தொழிலை விரிவுப்படுத்தினார்கள். அதன் பயனாக கடல்கடந்த வர்த்தகம் வளர்ச்சியடைந்தது. வணிகத்துக்காக சென்றபோது பல நாடுகளைக் கைப்பற்றினார்கள். அங்கு தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ததுடன் அங்கிருந்த மூல பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்றனர். அதனைப் பயன்படுத்தி பல வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்தார்கள்.
இந்த வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வங்கி போன்ற பொருளாதார நிறுவனங்களும், வர்த்தக நகரங்களும் தோற்றுவிக்கப்பட்டன. பண்டமாற்று முறை வீழ்ச்சியடைந்தது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கின்ற விஷயமாக, பணம் மாற்றம் பெற்றது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜரோப்பாவில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டது.
சுருக்கமாக சொன்னால், ஜரோப்பிய நாகரிகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட திருப்புமுனையே ஐரோப்பிய மறுமலர்ச்சி எனப்படுகிறது.
மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்
உலக வரலாற்றில், ஜரோப்பிய மறுமலர்ச்சி என்ற சம்பவம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா கலாச்சாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே ஜரோப்பிய மறுமலர்ச்சி (Europe renaissance) எனப்படுகிறது. மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' அல்லது 'புத்துயிர்ப்பு' என்று பொருள்.
கடந்த 1453ம் ஆண்டு, கிழக்கு ரோமப் பேரரசின் வர்த்தக மையமாக செயல்பட்ட கான்ஸ்டாட்டிநோப்பிள் துறைமுகத்தை ( Constantinople) ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றினர். இதுவே, ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். இந்த படையெடுப்பால், கிழக்கு ரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள், மேற்கு ரோம பேரரசிற்கு இடம் பெயர்ந்தனர். அப்படி செல்லும்போது, கான்ஸ்டாட்டிநோப்பிளில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பண்டைய நூல்களையும் கூடவே எடுத்து சென்றனர். அறிஞர்கள், அறிவுப் பொக்கிஷமாக இருந்த பலதுறை நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்தனர். பண்டைய இலக்கியங்களை கற்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இதனால், மேற்கு ரோம பேரரசில் புதிய கருத்துக்களின் தாக்கம் ஏற்பட்டது. இதன்விளைவாக, 14ம், 15ம் நூற்றாண்டுகளில் கிரேக்க, ரோம கலாச்சாரம் மீண்டும் புத்துயிர்ப்பு அடைந்தது.
தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை மக்கள் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தனர். எந்த ஒரு விஷயத்தையும் ஆய்வு செய்யும் போது ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை அடிப்படையாக வைத்து, தர்க்க ரீதியாக ஆய்வுகளை நிகழ்த்தினார்கள். அதுவரை இருண்ட காலத்தில் இருந்த ஜரோப்பிய அரசியல், பொருளாதார, விஞ்ஞான துறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜரோப்பாவில் புதிய நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே 'மறுமலர்ச்சி' என அழைக்கப்படுகிறது.
அறிவியல் கண்ட முன்னேற்றம்
கிறிஸ்தவ மதபீடம் என்ற ஒரு குறுகிய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், பின்னர் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜரோப்பிய மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. கத்தோலிக்க திருச்சபையின் ஊழல் நடவடிக்கைக்கு எதிராக அன்றைய அறிவுஜீவிகள், பல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்தார்கள். அதற்கு மக்களும் ஆதரவு அளித்தார்கள்.
‘உலகம் தட்டையானது’ என்பன போன்ற மதத்தின் பெயரால் நிலவி வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, விஞ்ஞானிகள் ஆய்வின் அடிப்படையில் புதிய கருத்துகளை வெளியிட்டனர். வானியலின் தந்தை எனப் போற்றப்படுகிற போலந்து நாட்டைச் சேர்ந்த 'நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்' (Nicolaus Copernicus) நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர். அதுவரை பூமியைத்தான் எல்லா கோள்களும் சுற்றி வருகிறது என்று நம்பப்பட்டு வந்த கருத்துக்கு எதிராக, பூமி சூரியனை வலம் வருகிறது என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். அதுதவிர, மற்ற கோள்களும் சூரியனை சுற்றி வலம் வருகின்றன என்பதை நிரூபித்து காட்டினார். அவரை அடுத்து, ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Keple) என்ற விஞ்ஞானி அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன என்றார்.
இத்தாலியைச் சேர்ந்த 'கலிலியோ' (Galileo Galilei) என்ற விஞ்ஞானி ஆற்றிய சாதனைகளும் ஏராளம். கணித பேராசிரியரான இவர், உயர்தரமான தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன்மூலம், சந்திரனை கண்காணித்து, அங்கே பூமியைப் போல மலைகள், சிகரங்கள் காணப்படுகின்றன என்றார். கோப்பர்நிக்கசின் கருத்துகளை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவலாய தலைமை, கலிலியோவை நாடு கடத்தியது. ஜசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி, 'நியூட்டனின் விதி' என்ற கோட்பாட்டின் வழியாக, விஞ்ஞான வளச்ச்சிக்கு வழியமைத்தார். எந்த ஒரு வினைக்கும், சமனான எதிர்வினை உண்டு என்பதை செய்முறை வழியாக நிரூபித்துக் காட்டினார்.
ஜெர்மனியரான 'ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்' என்ற விஞ்ஞானி அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பு துணைபுரிந்தது. மறுமலர்ச்சி கருத்துகளை மக்கள் மத்தியில் நூல் வடிவில் பரப்ப, அச்சியந்திரம் உதவியதால் மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் எளிதாக ஊடுருவின.
உயரம் சென்ற மருத்துவம்
மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புது யுகத்தில், மருத்துவத் துறை சிறப்பான வளர்ச்சியினை அடைந்தது. 'மைக்கல் சர்வேஸஸ்' ( Michael Servetus)என்பவர் மனிதனுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுவதில், நுரையீரலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் ஹார்வே' (William Harvey) என்ற விஞ்ஞானி இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்தினை முதன்முதலில் முன்வைத்தார்.
அரசியல் மாற்றம்
சமய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க மதகுருமார்களின் அளவுக்அகு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் மன்னனது கைகளிற்கு திரும்பியது. அதேபோல், ஜரோப்பாவில் நிலப்பிரபுக்களுக்கு இருந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமைகள், சலுகைகள் போன்றவை இல்லாமல் ஒழிக்கப்பட்டன. மத்தியதர வகுப்பினர் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இதனால், ஜரோப்பிய அரசியலில் உறுதித்தன்மையும், தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டது. ஜரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.
பொருளாதார புரட்சி
மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பொருளாதாரத்திலும் புதுயுகத்தை தோற்றுவித்தது. மன்னர்கள், பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார்கள். மறுமலர்ச்சி காலத்தில், ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. மனிதசக்திக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள்இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க, ஐரோப்பியர்கள் புதிய நாடுகளைத் தேடி பயணப்பட்டனர். திசைகாட்டும்கருவி, தொலைநோக்கி, படகு, ஆயுதங்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு நாடுகளைக் கடக்க உதவியாய் இருந்தது.
ஜரோப்பியர்கள் கப்பல் கட்டும் தொழிலை விரிவுப்படுத்தினார்கள். அதன் பயனாக கடல்கடந்த வர்த்தகம் வளர்ச்சியடைந்தது. வணிகத்துக்காக சென்றபோது பல நாடுகளைக் கைப்பற்றினார்கள். அங்கு தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ததுடன் அங்கிருந்த மூல பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்றனர். அதனைப் பயன்படுத்தி பல வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்தார்கள்.
இந்த வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வங்கி போன்ற பொருளாதார நிறுவனங்களும், வர்த்தக நகரங்களும் தோற்றுவிக்கப்பட்டன. பண்டமாற்று முறை வீழ்ச்சியடைந்தது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கின்ற விஷயமாக, பணம் மாற்றம் பெற்றது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜரோப்பாவில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டது.
சுருக்கமாக சொன்னால், ஜரோப்பிய நாகரிகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட திருப்புமுனையே ஐரோப்பிய மறுமலர்ச்சி எனப்படுகிறது.
