Type Here to Get Search Results !

உலக நாணயங்கள் வரலாறு என்றால் என்ன?

ஆரம்ப கால நாணயங்கள் என்றால் என்ன?

கி.மு. 2000 இல் நடந்த இரண்டு அடிப்படை கண்டுபிடிப்புகளில் இருந்து நாணயம் உருவானது. முதலில் பண்டைய மெசொப்பொத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலும், பின்னர் பண்டைய எகிப்திலும் கோவில் வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில் முதலில் பணம் என்பது ரசீதாக கிடைத்தது.

நாணயத்தின் முதல் கட்டத்தில், பொருட்களின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உலோகங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன. இது 1500 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வரும் செழிப்பான வர்த்தகத்தின் அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், அண்மைய கிழக்கு வர்த்தக அமைப்பின் சரிவு ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டியது

 ஒரு காலகட்டத்தில், மதிப்பைச் சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் இல்லை, சுழற்சியடையும் ஊடகத்தின் மதிப்பு, அந்த அங்காடியை பாதுகாத்துள்ள படைகள் போல் அமைந்து இருக்கும். அந்த இராணுவப்படைகளின் நம்பகத்தன்மை இருக்கும் இடம் வரைக்குமே வர்த்தகம் சென்றடைய முடியும் என்றிருந்தது.

வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில், கிழக்கு நடுநிலம் (மத்தியதரைக்கடலுக்குக் கிழக்காக உள்ள நாடுகள்) முழுவதும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல ஒப்பந்தங்கள் இடப்பட்டன. இவை வடமேற்கில் மினோவன், கிரீட் மற்றும் மைசீன் (Mycenae) போன்ற இடங்களிலிருந்து, தென்கிழக்கில் ஈலாம் மற்றும் பகுரைன் ஆகிய இடங்கள்வரை பரவியிருந்தன.

இந்த வணிகப் பரிமாற்றங்களில் என்ன வகையான நாணயங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியாமல் இருந்தாலும், இவை சைப்ரஸில் உற்பத்தி செய்யப்பட்ட, எருது போன்ற விலங்குகளின் தோல் அமைப்பை ஒத்த, இங்காட்கள் என்று அழைக்கப்படும் செப்பு நாணயங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடல் கொள்ளை, மற்றும் வெண்கலக்கால வீழ்ச்சி தொடர்பான திடீர்ச் சோதனைகள் அதிகரிப்பு இங்காட்கள் நாணய அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது.

கி.மு 10ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் வந்த போனீசியா வணிகம் மீண்டும் உலோக நாணயங்களையும், செழிப்பையும் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து கிரேக்க, பின்னர் பேர்சியன் நாணயங்கள் உருவாகின. 

ஆப்பிரிக்காவில், மணிகள் (beads), இங்காட்கள், தந்தம், பல்வேறு வகையான ஆயுதங்கள், கால்நடைகள், மணிலா நாணயம், மற்றும் ஓச்சர் மற்றும் பிற நில ஆக்சைட்டுக்கள் உட்பட பல வகையான மதிப்புக்கள் நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

15 ஆம் நூற்றாண்டில் இருந்து அடிமைகளை விற்கும்போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களில், மேற்கு ஆப்பிரிக்காவின் மணிலா வளையங்களும் இருந்தன. ஆபிரிக்க நாணயங்கள் தற்போதும் அதன் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. உலகின் சில இடங்களில் தற்போதும் சில இடங்களில் பண்டமாற்று முறையும் நடைமுறையில் உள்ளது. 

 நாணயக்காலம் என்றால் என்ன?

இந்தக் காலகட்டத்தில், உலோகமானது (முதலில் வெள்ளி, பிறகு ஒரே சமயத்தில் வெள்ளியும் தங்கமும், ஒரு காலத்தில் வெண்கலம்) மதிப்பை நிர்ணயிக்கும் நாணயமானது. இப்போது நாம் செம்பு உலோகம் மற்றும் விலைமதிப்புக் குறைந்த உலோகங்கள் ஆகியவற்றை நாணயங்களாகக் கொண்டிருக்கிறோம்.

உலோகம் வெட்டப்பட்டு, எடையிடப்பட்டு, நாணயங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. நாணயத்தை எடுத்துக் கொள்ளும் தனிமனிதன் ஒரு குறிப்பிட்ட எடையில் விலைமதிப்பற்ற உலோகத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாக உறுதி செய்ய வேண்டும். கள்ள நாணயங்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் வழிமுறையை உருவாக்கினர். இது வங்கி அமைப்புக்கள் உருவாக உதவின.

ஆர்க்கிமிடீசு தத்துவம் அடுத்த ஒரு முறையை உருவாக்கியது. நாணயங்கள் இப்போது இலகுவான முறையில் உலோகத்தின் அளவையிட்டுச் சோதிக்கப்படலாம். இதனால் நாணயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவற்றின் உண்மையான மதிப்பை தீர்மானிக்க முடியும். நாணயத்தைப் பயன்படுத்தும் மிகப்பெரும் பொருளாதாரங்கள் பல செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆன நாணயங்களைக் கொண்டிருந்தன. பெரிய கொள்முதல், இராணுவம் மற்றும் அரச நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றிற்குத் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.

அவை பெரும்பாலும் பொருள் சார்ந்ததாக அன்றி, கணக்கின் அளவீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி நாணயங்கள் நடுத்தர பரிமாற்றங்களுக்கும், வரி, கட்டணம், ஒப்பந்தங்கள் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கான கணக்கின் அலகாகவும் பயன்படுத்தப்பட்டன.செம்பு, வெள்ளி, அல்லது பல உலோக கலவைகளால் செய்த நாணயங்கள் ஆகியவற்றை தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.இந்த முறை மகாஜனபாடர்களின் காலத்திலிருந்து பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது.

மூன்று உலோகங்களின் மதிப்பில் சரியான விகிதம் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஸ்பெயினின் வெற்றிக்குப் பிறகு புதிய உலகில் வெள்ளி அதிகரித்தது போல, மத்திய ஐரோப்பாவின் ஹார்ஸ் (Harz) மலைகளில் வெள்ளி சுரங்கங்கள் திறக்கப்பட்டு வெள்ளி அதிகளவில் பெறப்பட்டபோது, வெள்ளியின் மதிப்புக் குறைந்தது. இருப்பினும், அரிதாகக் கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு வெள்ளியைவிட அதிகமாகவும், வெள்ளியின் மதிப்பு செம்பைவிட அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வந்தது. காகித பணம் சொங் அரசமரபு Jiaozi, உலகின் முதலாவது 

காகிதப் பணம்  என்றால் என்ன?

நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், கடனும், அதிகளவு எண்ணிக்கையான செப்பு நாணயங்களைவிடச் சிக்கல்தன்மை குறைந்த பரிமாற்ற ஊடகமாக இருந்தமையும், காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது, எ.கா. வங்கித்தாள்.

அவற்றின் அறிமுகம், சிறிது சிறிதாக தாங் அரசமரபின் பிற்பகுதியில் இருந்து, (618-907) இருந்து சொங் அரசமரபு (960-1279) வரை நீடித்தது. வணிகர்களின் அதிகளவான உலோக நாணயங்களின் வைப்புத் தொகைக்கு ஈடாக, மொத்த விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தாள்களால் இந்த முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தத் தாள்கள் ஒரு சிறிய வட்டார பிராந்தியத்தில் தற்காலிக பயன்பாட்டிற்கு செல்லுபடியாகும். 10 ஆம் நூற்றாண்டில், சொங் அரசமரபு அரசாங்கம், அதன் தனிஉரிமை கொண்ட உப்புத் தொழிற்துறையில், வணிகர்களிடையே இத்தகைய தாள்களைப் பரப்பத் தொடங்கியது. சாங் அரசாங்கம் இத்தகைய தாள்களை வெளியிடுவதற்கான உரிமையை பல கடைகளுக்கு வழங்கியது.

பின்னர், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொங் அரசாங்கம் அந்தக் கடைகளை தாமே கையகப்படுத்தி, அரசினால் வெளியிடப்படும் நாணயத்தை உருவாக்கியது. ஆனாலும் இத்தகைய தாள்கள் மட்டும் செல்லுபடியாவதாகவும், தற்காலிகமாகமானதாகவுமே இருந்தன. 13 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே, ஒரு நிலையான மற்றும் சீரான அரசுப் பத்திரமான காகிதப் பணம் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க நாணயமாக மாறியது. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏற்கனவே பரவலான முறையாக இருந்த மரக்குற்றி மூலம் அச்சிடுதலும், அதன் பின்னர் வந்த ஷெங்கின் நகர்தல் வகை அச்சிடுதலும், நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், காகிதப் பணம் மிக அதிகளவில் உற்பத்தியாக உதவின.

அதே வேளை, இடைக்கால இஸ்லாமிய உலகில், 7-12 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு நிலையான உயர் மதிப்பு நாணயத்தின் (தினார்) விரிவாக்க அளவுகளின் அடிப்படையில், ஒரு தீவிரமான பணவியல் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. வைப்பு, காசோலை, உறுதிப்படுத்தப்பட்ட காகிதத்தாள் , சேமிப்புக் கணக்குகள், பரிவர்த்தனைக் கணக்குகள், அறக்கட்டளை, நாணய மாற்று வீதம், கடனளிப்பு, வைப்பு மற்றும் கடன் பரிமாற்றங்கள், வைப்பு மற்றும் கடனுக்கான வங்கி நிறுவனங்கள் என்பன இஸ்லாமிய பொருளியலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐரோப்பாவில், 1661 ஆம் ஆண்டில் சுவீடனில் ஒரு ஒழுங்கு முறையில் முதலில் காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் வாசிங்டன் இர்விங் என்பவரால், ஸ்பெயினில் முற்றுகையில், கிரேனாடாவை வென்ற போது, முன்னரே காகிதப் பணம் அவசரகாலப் பயன்பாடாகப் பதிவுசெய்யப்பட்டிருந்க்கிறது. சுவீடனில் செப்பு அதிகளவில் நிறைந்திருந்ததால், அதன் குறைந்த மதிப்பு அசாதாரணமாக பெரிய நாணயங்களை (பல கிலோ எடையுள்ளவை) உருவாக்கும் தேவையை ஏற்படுத்தியது.

காகித நாணயத்தின் நன்மைகள் ஏராளமாக இருந்தன: தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான தேவை குறைக்கப்பட்டது; தங்கம் அல்லது வெள்ளி கடன்களை வட்டிக்கு வசூலிக்கச் செய்தது, ஏனென்றால் அந்தக் கருவி (தங்கம் அல்லது வெள்ளி) கடன் வாங்கியவரை வேறு ஒருவரிடமிருந்து மீட்டெடுக்காத வரை, அது நாணயத்தின் ஒரு பகுதியை கடன் மற்றும் பிரத்தியேக ஆதரவு வடிவங்களுக்குள் அனுமதித்தது. இது கூட்டு-பங்கு நிறுவனங்களில் பங்கு விற்பனைக்கு உதவியது, மற்றும் காகிதத்தில் அந்த பங்குகளை மீட்டெடுப்பது. 

வங்கி நோட்டுகளின் காலம்   என்றால் என்ன?

ஒரு பணத்தாள் (பொதுவாக அமெரிக்காவில் மற்றும் கனடாவில் உள்ள ஒரு பில் என அழைக்கப்படுகிறது) ஒரு வகை நாணயம், பொதுவாக பல சட்டவாக்கங்களில் சட்ட ஒப்பந்தமாக பயன்படுத்தப்படுகிறது. நாணயங்களுடன் பணத்தாள்களும் பணத்தின் வடிவத்தை உருவாக்குகின்றன. வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் காகிதத்தில் உள்ளன, ஆனால் 1988 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் உலகின் முதலாவது பாலிமர் நாணயத்தை உருவாக்கியது, பாலிமர் நாணயங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது மற்றும் கள்ளப்பணத்தைத் தடுக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad